Home>>இந்தியா>>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மாநில முதல்வர்களைக் கூட்டுக.
ஐயா. பழ. நெடுமாறன்
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மாநில முதல்வர்களைக் கூட்டுக.

தமிழ்நாடு முதல்வருக்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.


நீட் தேர்வு பிரச்சனைக்காக சந்திக்கச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவைச் சந்திக்க மறுத்த உள்துறை அமைச்சர் அமித்சாவை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்கிறேன்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதை மாற்றுவதற்குத் தமிழக அரசு செய்துள்ள முடிவினை வரவேற்கிறேன்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்குமே அடிப்படை காரணமாகும். இதன் விளைவாகத்தான், ஒன்றிய அரசு கல்வித்துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலொழிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது. எனவே, ஒத்தக் கருத்துடைய பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் ஒருங்கிணைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவரும் முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.


திரு. பழ. நெடுமாறன்,
தலைவர்,
தமிழர் தேசிய முன்னணி.


செய்தி உதவி:
மருத்துவர் பாரதிசெல்வன்,
மன்னார்குடி.

Leave a Reply