Home>>ஆன்மீகம்>>வல்லம்படுகையில் திருவாசகம் முற்றோதல்!
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

வல்லம்படுகையில் திருவாசகம் முற்றோதல்!

சிதம்பரம் வட்டம் வல்லம்படுகை சிற்றூரில் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் இன்று 07-11-2021 காலை 9 மணிக்கு வல்லம்படுகை அருள்மிகு பருதேசியப்பர் திருக்கோயிலில் “திருவாசகம் முற்றோதல்” நடைப்பெற்றது.

சிவ நெறி மெய்யியலாளர் மாணிக்கவாசகர் பெருமான் அருளிய “திருவாசகம்” முற்றோதல் திருவிளக்கேற்றி தொடங்கப்பட்டது.

தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்பாட்டாளர் திரு. கோதண்டபாணி அவர்கள் வரவேற்று பேசினார். திரு.சிவ நாகராஜன் அவர்கள் கருத்துரையாற்றினார்.

இதில் ஓதுவார்கள் திரு.கு.ப வைத்தியநாதன், திரு சிவ.கருணாநிதி உள்ளிட்ட சிவனடியார்கள் இசைக் கருவிகளோடு குழுவாக திருவாசகம் முற்றோதல் பாடினர்.

திருவாசகம் முற்றோதல் செய்த சிவனாடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பேரியக்க சீர்காழி நகரச் செயலாளர் அரவிந்தன், பூங்குடி திரு.சந்திரசேகர், திரு வே.சரவணகுமார், பெராம்பட்டு திரு பாலு, திட்டுக்காட்டூர் திரு.நடராஜன், வடமூர் திரு.த.செல்வம் உள்ளிட்ட தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். மேலும் வல்லம்படுகை ஊர் முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இறுதியில் அருள்மிகு பருதேசியப்பர் திருக்கோயில் நிர்வாகி திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்.

இந்நிகழ்வை தெய்வத்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வே.சுப்ரமணியசிவா ஒருங்கிணைத்தார்.
கடும்மழை என்றாலும் திட்டமிட்டப்பட்டி முற்றோதல் மிகச் சிறப்பாக நடந்து நிறைவேறியது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.


செய்தி உதவி:
தெய்வத் தமிழ்ப் பேரவை

Leave a Reply