Home>>செய்திகள்>>தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தி. வேல்முருகன்
திரு. தி.வேல்முருகன்
செய்திகள்தமிழ்நாடு

தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தி. வேல்முருகன்

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் தொடர் கனமழையால் மழை நீருடன் கழிவு நீர் புகுந்து தேங்கி இருப்பதாக கேள்விப்பட்டு நேரில் பார்வையிட்டேன்.

கடந்த மாதம் அந்த பகுதியில் பார்வையிட்ட போது ஒவ்வொரு மழைக் காலத்தின் போதும் இது போன்ற பிரச்சனை தங்களுக்கு எழுவதாகவும் இதனை நிரந்தரமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆய்வு செய்தோம்.

பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் உடனடியாக மழை நீர் வெளியேற்ற அறிவுறுத்தினேன். மேலும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply