Home>>உலகம்>>ஈழம்>>தேசிய தலைவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
ஈழம்உலகம்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவரலாறு

தேசிய தலைவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி வடக்கு வீதியில் அமைந்துள்ள சாய் கிருஷ்ணா மண்டபத்தில் ஐயா பழ. நெடுமாறன் வழிகாட்டுதலில் திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் தலைமையில் குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அரசு காவல் துறை அதற்கு தடை விதித்த நிலையில், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நேரடியாகவே சிறப்பான முறையில் குருதிக்கொடை கொடுக்கப்பட்டது. குருதி கொடையாளிகள் பலர் கலந்துகொண்டு குருதிக்கொடை அளித்தார்கள். குருதி கொடையாளிகளுக்கு தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் சான்றிதழும் தேசிய தலைவர் படமும் வழங்கப்பட்டது.

வருடா வருடம் தேசிய தலைவர் பிறந்தநாளில் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியினரால் குருதிக்கொடை முகாம் நடத்தப்படும் வழக்கத்தை இவ்வருடம் தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பது தமிழ் தேசிய முன்னணியினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


செய்தி உதவி:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply