Home>>செய்திகள்>>திருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழா.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேலைவாய்ப்பு

திருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழா.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகில் அசோக சக்ரா போட்டி தேர்வு மையம் தொடக்க விழா முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலையில் திருத்துறைபூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர் சங்க தலைவர் ஆர்பி.அருள்செல்வம், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளை தலைவர் சிவா சண்முகவடிவேல், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், ரோட்டரி சங்க தலைவர் காளிதாஸ், ஜேசிஸ் சங்கத் தலைவர் செந்தில், எடையூர் ஒன்றிய கவுன்சிலர் துரையரசன், திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, அகில இந்திய கட்டுனர் சங்க தலைவர் துரை ராயப்பன், ஜேசி சங்க முன்னாள் தலைவர் ராஜ் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் முன்னதாக பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். இறுதியாக அசோக சக்ரா போட்டித் தேர்வு மைய இயக்குனர் பொறியாளர் இளஞ்சேரலாதன் நன்றி கூறினார்.

மேலும் நூலகர் திரு.ஆசைத்தம்பி அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply