Home>>செய்திகள்>>மன்னார்குடி தலைமை மருத்துவமனையின் கழிவுநீர்கள் சாலையில் செல்வதால் நோய்தொற்று அபாயம்.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி தலைமை மருத்துவமனையின் கழிவுநீர்கள் சாலையில் செல்வதால் நோய்தொற்று அபாயம்.

மன்னார்குடி தலைமை மருத்துவமனையில் தற்போது பல வசதிகள் செய்து தரம் உயர்த்தபட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையின் கழிவுநீர்கள் அனைத்தும் மருத்துவமனையின் பின் பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தேங்கி அருகில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் கலக்க்கிறது. இது பல மாதங்களாக சரி செய்யப்படாமலே உள்ளது.

இதன் அருகிலேயே பிரசவ வார்டு, படிப்பகம் என அனைத்தும் செயல்படுகிறது. நகராட்சி அலுவலகமும் இதன் அருகிலேயே செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணுகியபோது தட்டிக்கழிக்கும் விதமாக செயல்படுகின்றனர்.


செய்தி சேகரிப்பு:
திரு. பிரசன்னா,
மன்னார்குடி.

Leave a Reply