Home>>செய்திகள்>>மன்னார்குடியில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெற்றது.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்வேளாண்மை

மன்னார்குடியில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சியார் தோப்பு நம்மாழ்வார் ஏரி நிரம்பியதற்காக அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள மன்னை உழவனில் நடந்தது.

இந்நிகழ்வில் மன்னையின் மைந்தர்கள் ஒருங்கிணைப்பாளர் ராசசேகரன், கரண் கார்த்தி, உழவன் அங்காடி நிறுவனர் அருண், பரவை சுரேசு மற்றும் மேலும் பலரும் கலந்து கொண்டனர்.

மருத்துவர் பாரதிசெல்வன் புகழ் வணக்க உரை நிகழ்த்தினார்.

இறுதியில் மருத்துவர் பாரதிசெல்வன் அவர்களால் ஐயா கைலாசம் மற்றும் முன்னாள் மன்னார்குடி நகை அடகுகடை உரிமையாளர் சங்க தலைவர் பொறியாளர் ராஜகோபாலன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply