Home>>செய்திகள்>>மன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவரலாறு

மன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.

இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது.

அப்போரிலே உயிர் நீத்த ஈகியர்களை நினைவுக்கூறும் வகையில் Jan 25 ஆம் தேதி மொழிப்போர் ஈகியர் நாளாக நினைவுக்கூற படுகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று மாலை 5.30 மணி அளவில் மருத்துவர் பாரதிச்செல்வன் இலரா உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியினர் மன்னார்குடி நகராட்சி எதிரில் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி வீர வணக்கம் செலுத்தினர்.


செய்தி உதவி:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply