Home>>செய்திகள்>>நேசக்கரம் அமைப்புக்கு குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

நேசக்கரம் அமைப்புக்கு குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

மன்னார்குடியில் தொடர் நற்காரியங்களையும், மனிதநேய பணிகளையும் செய்து வருகின்ற நேசக்கரம் அமைப்புக்கு, இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி ப. காயத்ரி கிருஷ்ணன் அவர்கள். நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சி. விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிதம்பரம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

இத்தகைய பாராட்டையும் பெருமையையும், மன்னார்குடியில் உள்ள அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர் களுக்கும் சமர்ப்பிக்கின்றோம்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply