Home>>இந்தியா>>தமிழர் குடிகள் ஒன்று சேராத வரை தரமற்றவர்களின் ஆட்டம் நீடிக்கத்தான் செய்யும்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழர் குடிகள் ஒன்று சேராத வரை தரமற்றவர்களின் ஆட்டம் நீடிக்கத்தான் செய்யும்.

தொடர்வண்டி பாதையில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை பணிகளில் சேர தடை – ரயில்வே அமைச்சகம்.

தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடவே கூடாது என இந்திய ஒன்றிய அரசின் ஒவ்வொரு சட்டங்களும் வினோதமாக இருக்கிறது. அவைகள் தமிழினத்திற்கு எதிராகவே பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே வெளிமாநிலத்தவர்கள் இங்குள்ள ஏதோ ஒரு வீட்டு முகவரியையோ அல்லது விடுதி முகவரியையோ கொடுத்துவிட்டு தமிழே தெரியாமல் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்து விட்டார்கள். நிலமை அப்படி இருக்க எங்களுக்கு நீதி வேண்டும் என்று போராடினால் ஏற்கனவே இருக்கும் அநீதியை விட மேலான அநீதியை வழங்குவோம் என்கிறது இப்புதிய சட்டம். இதையெல்லாம் யார் தட்டி கேட்பது? நமக்குள்தான் ஆயிரம் சண்டைகள் இருக்கே?

தமிழர் குடிகள் ஒன்று சேராத வரை தரமற்றவர்களின் ஆட்டம் நீடிக்கத்தான் செய்யும்.


திரு. வ. கெளதமன்,
பொது செயலாளர்,
தமிழ்த்தேசிய பேரரசு கட்சி.

Leave a Reply