Home>>இந்தியா>>கோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

கோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று (15.08.22) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நடுநிலைப் பள்ளி, கோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் விழாவானது பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் நகர மன்ற உறுப்பினர் திருமதி.சுமதி நெடுஞ்செழியன் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அரிமா அமைப்பின் தலைவர் Ln.திரு. ரமேஷ் அவர்களால் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியர்,
கோபாலசமுத்திரம் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply