Home>>அரசியல்>>திருத்துறைப்பூண்டி தொகுதி சாலை புனரமைப்பு நிதி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்போக்குவரத்துமாவட்டங்கள்

திருத்துறைப்பூண்டி தொகுதி சாலை புனரமைப்பு நிதி ஒதுக்கீடு.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் – ரெங்கநாதபுரம் சாலை சீரமைத்து தரம் உயர்த்திட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர்- ரெங்கநாதபுரம் மற்றும் விளக்குடி- முன்னியூர் சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் ‘திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் – ரெங்கநாதபுரம இடையே சுமார் 6.8 கி.மீ சாலையை செப்பனிட்டு தரம் உயர்த்திட ரூ.5.43 கோடியும், விளக்குடி –  முன்னியூர் வரை சுமார் 1.5 கி.மீ தூரம் கொண்ட சாலையை செப்பனிட்டு தரம் உயரத்திட ரூ.1.75 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.


செய்தி உதவி:
தோழர் கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply