Home>>அரசியல்>>3000 டன் நெல் மூட்டைகள் சேதம். 80 கோடிக்கு பேனா சிலை தேவையா? – ராம. அரவிந்தன்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

3000 டன் நெல் மூட்டைகள் சேதம். 80 கோடிக்கு பேனா சிலை தேவையா? – ராம. அரவிந்தன்

முன்னாள் தமிழ் நாடு முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கு 80 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் பேனா சிலை வைக்கும் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை கிளப்பி விட்டு இருக்கும் இந்த வேளையில், நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் பாசறையின் மாநிலத்தலைவர் மற்றும் மன்னார்குடி சட்டமன்றத்தொகுதியின் வேட்பாளர் திரு. ராம. அரவிந்தன் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் அரசு தானியக்கிடங்குகளில் வீணாகிப் போகும் 3,000 டன் மூட்டைகளை கண்டறிந்துள்ளார்.தமிழ்நாடு முழுதும் இதேப்போல வீணாகிப்போகும் நெல் மூட்டைகளை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஆளும் திமுக அரசு சிலை வைப்பதை எதிர்த்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம்,

“திருவாரூர் மாவட்டத்தில் அரசு தானிய சேமிப்புக்கிடங்குகளில் ஏறத்தாழ மூன்றாயிரம் டன் (3000-ம்,டன்)சேதமடைந்த,அரிசியாக்கி பயன்படுத்த முடியாத நெல் மூட்டைகள் இருப்பில் உள்ளதனை எமது *நாம்தமிழர்* கட்சியின் கையூட்டுஊழல் ஒழிப்புப்பாசறை கண்டறிந்துள்ளது.மாநிலம் முழுவதும் இதுபோல வீணடிக்கப்படும் உணவு தானியங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை கண்டறிந்துள்ளது.விரைவில் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும்.

உணவு தானியங்களை சேமிக்க உரிய தானியங்களை பாதுகாக்க உரிய சேமிப்புக்கிடங்குகளை கட்ட இயலாத திமுக அரசு மறைந்த கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் ஏறத்தாழ எண்பது கோடிகளில் அமைக்க முற்படுவது தமிழர்களுக்கு செய்யும் துரோகமில்லையா?

ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு டன் நெல்மணிகள் வீணடிக்கப்படும்போது தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் இது இமாலய தவறில்லையா? இந்த ஸ்டாலின் அரசின் கையாலாகாததனத்தினை எமது மக்கள் உணர வேண்டும். இந்த திமுக ஊழல் அரசின் மக்கள் விரோத போக்கினை நாம்தமிழர் நாங்கள் தோலுரித்து எமது மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

சேமிப்புக்கிடங்குகளை கட்ட திராணியற்ற அரசின் கையில் நிதியில்லை எனப்புழுகும் ஸ்டாலின் அரசு
இந்த நிலையில் பேனா நினைவுச்சின்னம் இவ்வளவு செலவில் அமைக்க முற்படுவது மக்கள் விரோதப் போக்கல்லவா?இதற்கு எமது மக்கள் இந்த திமுக அரசிற்கு பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல்களில் நாம்தமிழர் கட்சியினை வெல்ல வைக்கவேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த முடிவாக வருங்காலங்களில் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்”


திரு. இராம. அரவிந்தன்,
மாநிலத் தலைவர்,
கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை,
நாம் தமிழர் கட்சி.


செய்தி சேகரிப்பு:
திரு. செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply