Home>>அரசியல்>>மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள்கள்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள்கள்.

கடந்த இரண்டு முறை வென்று எதிர்க்கட்சியாக இருந்து, தற்பொழுது மூன்றாவது முறையாக வென்று ஆளும் கட்சியில் பங்கு வகிக்கும் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு. TRB. இராஜா அவர்களுக்கு மன்னார்குடி தொகுதி வாக்காளர் ஒருவர் தன்னுடைய சமூக ஊடக கணக்கில் வெளியிட்டுள்ள வேண்டுகோள்களை தங்கள் பார்வைக்கு கீழேக் கொடுத்துள்ளோம்.


உழவர்களின் நெல் மூட்டைகளை இயற்கை பேரிடர்களிலிருந்து காப்பாற்ற TNCSC திறந்தவெளியில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடமும், தகர கொட்டகைகளும் அமைக்கப்பட வேண்டும்.

நெல் இயக்கம் மிக துரிதமாக செய்யப்படவேண்டும். தாமத இயக்கத்தால் பெருவாரியான நெல் எடையிழப்பு, தரக்குறைவு ஏற்பட்டு நிர்வாகமும், ஊழியர்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தகுதிக்கேற்றவாறு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை மன்னார்குடியில் அடிக்கடி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களை உழவு சார்ந்த, சாராத பணிகளில் ஈடுபடுத்தி வருடம் முழுவதும் வேலை வழங்கி கண்காணிக்க வேண்டும்.

கிராமபுறங்களில் இயற்கை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் உரங்கள் மற்றும் வாழ்வியலுக்கு பயன்படும் சிறு தொழிற்சாலைகளை ஏற்படுத்தி பொருளாதாரம் மேம்பட செய்ய வேண்டும்.

மன்னார்குடி கிருசுணதீர்த்தம், கரித்ராநதி தெப்பக்குளம் சுற்றுவட்ட நடைபாதை பணிகளை விரைந்து மேம்படுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

பொதுகுளங்கள் அருகே உள்ள வணிக, மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருடம் முழுவதும் நீர் மேலாண்மைக்கு பயன்பட செய்தல் வேண்டும்.

நகர, கிராமப்புற சாலைகளை பழுது நீக்கி தொடர்ந்து பராமரித்து கண்காணிக்க வேண்டும்.

நகரின் சாக்கடை கழிவுகளை மூடப்பட்ட குழாய்கள் வழியே கொண்டு சென்று தூய்மைப்படுத்தி centrifugal plant கட்டமைப்பு வாயிலாக நன்னீர் மற்றும் உரங்கள் தயாரித்து வேளாண்மைக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

பேருந்து வசதிகளை கிராமப்புறங்களுக்கு அதிகம் வழங்கி பள்ளி நேரங்களில் “மாணாக்கர்கள் சிறப்பு பேருந்து” வசதிகளை ஏற்படுத்தி ஆபத்தான படிக்கட்டு பயணங்களை தவிர்க்க போக்குவரத்து துறையை வலியுறுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மக்களுக்காக நிறைவேற்ற தங்கள் நெடுநாள் கனவு திட்டம் மின்னும் மன்னை விரைந்து நனவாகி நிறைவேற எங்கள் வாழ்த்துக்களும்.


எழுத்து:
திரு. ரவிச்சந்திரன்,
மன்னார்குடி.

Leave a Reply