Home>>அரசியல்>>இளைஞர்கள் சிந்தியுங்கள்! எங்களை வழிநடத்துங்கள்!!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

இளைஞர்கள் சிந்தியுங்கள்! எங்களை வழிநடத்துங்கள்!!

என்னதான் செய்வது? தமிழர்கள் நாம் நம்முடைய அடிப்படை அடையாளத்தை, இளையோர் நலன்களை, கனிமவளங்களை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை என எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

“ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத் தீருவோம்” என்று முழங்கியவர்கள் ஒரு குடும்ப ஆதிக்கத்துக்குள் நம்மைச் சிக்க வைத்திருக்கிறார்கள். ஐயா திராவிடம் இப்படியென்றால், அம்மா திராவிடம் இன்னும் கேவலம்.
இவர்களிடமிருந்து நம்மைத் தட்டிப்பறித்து, முழு அடிமைகளாக்கிவிட முனைந்து கொண்டிருக்கிறது பார்ப்பனீய பாசிசம்.

தமிழ்த் தேசியம் பேசும் போலி மீட்பர்களோ, “என்னை முதல்வராக்கு,” “இந்த மண் என் கையில் சிக்கட்டும்,” “என் திரைப்பட வசனத்தைக் கேள்” என்றெல்லாம் பிதற்றித் திரிகிறார்கள்.

என்னதான் செய்வது? திராவிடத்தின் பிடியிலிருந்து எப்படித் தப்பிப்பது? திரைத்துறை புரட்சியாளர்களை எப்படித் தவிர்ப்பது? மாபெரும் ஆபத்தான காவி பாசிசத்தின் சதித்திட்டத்தை எப்படி முறியடிப்பது?

இளைஞர்கள் சிந்தியுங்கள்! எங்களை வழிநடத்துங்கள்!!


ஐயா. சுப. உதயகுமாரன்,
நிறுவனர் – பச்சைத் தமிழகம் கட்சி.
நாகர்கோவில்,
பிப்ரவரி 26, 2024.

Leave a Reply