Home>>அரசியல்>>கமல் பேரை கெடுக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசியல்காவல்துறை

கமல் பேரை கெடுக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் நீதி மய்யத்தில் பல நில திருடர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அதில் ஒருவரிடம் கமல் பேரை சொல்லிக்கொண்டு அடுத்தவர் நிலத்தை அபகரிக்கலாமா என்றேன். இதற்கு ஏன் கமல் பேரை இழுக்கிறீர்கள் என்றார்.
கமலின் புகைப்படத்தை போட்டு விசிட்டிங் கார்டு ஊர் முழுவதும் கொடுத்தால் கமல் பேரை சொல்லாமல் வேற யாரை சொல்லுவது என்றேன். கமல் மக்கள் தளத்திற்கு வந்தபின் அவரை சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றேன். உடனே அவர் நான் முன்னாள் கவுன்சிலர் என்றார். யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்க.

ஏற்கனவே ஒருவர் வாங்கிய நிலத்தை அவர் பத்திரம் செய்த பின் மீண்டும் அதே நிலத்தை போர்ஜரி செய்து பத்திரம் செய்து, பட்டா வாங்கிய அனைத்து அயோக்கிய வேலைகளுக்கும் ஒரு மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகி துணை போகி இருக்கிறார். இவர் எல்லாம் கட்சியில் வைத்தால் எப்படி அந்த கட்சி உருப்படும்.

நடிகர் கமலின் பார்வைக்கு இதை கொண்டு செல்வேன் என்றால் அவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார். கமலின் புகைப்படம், கட்சி பெயரை போட்டு விசிட்டிங் கார்டு அடித்து, காரை சென்னையில் இருந்து எடுத்துக்கொண்டு சிவகங்கை மாவட்டம் போய் ஹோட்டல் ரூம் எடுத்து எல்லா தரகு வேலையும் பார்த்து அதற்கு உள்ள கமிஷனை பெற்றுக் கொண்டு, எல்லாத்துக்கும் காரணம் சிவகங்கை மாவட்ட மக்கள் நீதி மய்யம் என்கிறார்.

நிலத்தை பறி கொடுத்தவர்கள் என்னிடம் புலம்புகிறார்கள். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை சொல்லி விட்டு வந்திருக்கிறேன். மாற்று என சொல்லி கட்சி ஆரம்பித்த மக்கள் நீதி மய்யத்திலும் நில மாபியாக்கள் இருக்கிறார்கள். கட்சி பெயரை வைத்துக்கொண்டு நிலத்தை பறி கொடுத்த நபரிடம் மிரட்டுவது எல்லாம் ஆபத்தான போக்கு. நடிகர் கமலகாசன் மக்கள் நீதி மய்யம் இவற்றிற்கு தெரிந்து தான் இவை நடக்கிறதா??

யார் அந்த நில மாபியா என்பது குறித்து விரிவாக எழுதுகிறேன். கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்கள் தளத்தில் அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த வேண்டி இருக்கும். செய்வது பித்தலாட்ட வேலை இதில் திமிரு பேச்சு வேற. இந்த ஆளுக்கு எல்லாம் கட்சியில் பொறுப்பு கொடுத்த கமலை சொல்லனும். கட்சி நடத்துகிறீர்களா இல்லை அடுத்தவர் நிலத்தை எப்படி பிடுங்களாம் என பயிற்சி கொடுக்கிறீர்களா?? அசிங்கமாக இருக்கு. கமல் பேரை கெடுக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!


எழுத்து:
திரு. யா. அருள்,
NAPM.

Leave a Reply