Home>>அரசியல்>>அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையை தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்கு பெயர் போன விடியா திமுக அரசு.

பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாக கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.


ஐயா. எடப்பாடி பழனிசாமி,
அதிமுக பொது செயலாளர்.

Leave a Reply