Home>>சுற்றுசூழல்>>தீபாவளியை வெடி வைத்து கொண்டாடாமல், செடி வைத்து கொண்டாட உள்ளோம்
சுற்றுசூழல்தமிழ்நாடு

தீபாவளியை வெடி வைத்து கொண்டாடாமல், செடி வைத்து கொண்டாட உள்ளோம்

பட்டுக்கோட்டையை அடுத்த பண்ணவயலில் உள்ள “ரௌத்திரம் பழகு” என்ற இளைஞர் அமைப்பினர் இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள், அதுவும் மண்ணையும், மக்களையும் காக்கும் வகையில்.

இதற்கு முன்னர் இவர்கள் இந்திய ஒன்றிய முன்னாள் சனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்களின் 88வது பிறந்த நாளில் (15/10/2019) 10000 பனை விதைகளை நடும் திருவிழாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்.

இளங்கலை வேளாண் படிப்பு நிறைவு செய்துள்ள சகோதரர் திரு.பவுன்ராஜ் அவர்கள் இதை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக்க, இவர்களின் அடுத்த முன்னெடுப்பாய் தீபாவளியன்று 100 மரக்கன்றுகள் நடும் விழாவை கொண்டாட உள்ளார்கள்.

உங்கள் ஆதரவோடு வெடி வைத்து கொண்டாடாமல், செடி வைத்து கொண்டாட உள்ளார்கள்.

நிலத்தடி நீரை தக்கவைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் தங்களால் ஆன சிறுமுயற்சி என ரௌத்திரம் பழகு அணியில் உள்ள சகோதரர் திரு.அசோக் குமார் அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

தாங்களும் இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்குக்கொள்ள விரும்பினால் திரு.பவுன்ராஜ் அவர்களை (+91 8870888986) அழையுங்கள்.

திரு.பவுன்ராஜ் அவர்களை பற்றி மேலும் அறிய: https://www.facebook.com/poun.raj.14418

அல்லது நேரில் கலந்துக்கொள்வது கடினம், இருப்பினும் நிதியாக வழங்கி சிறப்பிக்க விரும்பினால் கூகுள் பே – 8870888986 வழியாகவும் நீங்கள் ரௌத்திரம் பழகு அணியினருடன் இணையலாம்.

கீழே அவர்களின் கடந்த கால பணிகளின் படங்களை தங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.

Leave a Reply