Home>>அரசியல்>>காமராசர் பிறந்த நாளில் மன்னார்குடி வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவணிகம்

காமராசர் பிறந்த நாளில் மன்னார்குடி வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஐயா பெருந்தமிழர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15/07/2021) மன்னார்குடியில் உள்ள தங்கமணி கட்டிடம் எதிரே அமைந்துள்ள காமராசர் சிலைக்கு வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையன் தலைமையில் இயங்கும் மன்னார்குடி வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்ட வணிகர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் சண்முகானந்தா உரிமையாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் தாரகை செல்வக்குமார், ஃபுட் பிளாசா சதிசு, ரெட் சில்லி சுந்தர், வளமுடன் மரச்செக்கு எண்ணெய் தி.ஜீவானந்தம், கேட் சென்டர் பாசில், உழவன் தேரடி பிரகாஷ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்குகொண்டனர்.

நிகழ்வில் ஐயா காமராசர் போல அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் வளர்த்து ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும் அவர் வழியில் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்து கொண்டு நிகழ்வை முடித்தனர்.


செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply