Home>>ஆன்மீகம்>>தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழைக் கட்டாயமாக்கு!
ஆன்மீகம்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழைக் கட்டாயமாக்கு!

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழைக் கட்டாயமாக்கு!
சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ளோரை அர்ச்சகராக்கு!
சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையில் சேர்த்திடு!
செங்கல்பட்டு ஓக மையத்திற்கு திருமூலர் பெயரிடு!
ஈசாவை அரசுடைமையாக்கி ஜக்கியை விசாரி!

==================================================
சென்னையில் தெய்வத் தமிழ்ப் பேரவை எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்!
==================================================

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும், செங்கல்பட்டு ஓக உயராய்வு மையத்திற்கு திருமூலர் பெயரைச் சூட்ட வேண்டும், ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில், இன்று (08.08.2022) – சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிகரம் ச. செந்தில்நாதன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் வே.பூ. இராமராசு (திருச்சி), வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் (புதுச்சேரி), தோழர் க. விடுதலைச்சுடர் (குடந்தை) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீட – வட குரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், ஆவடி – தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் திருவாட்டி. கலையரசி நடராசன் அம்மையார், வள்ளலார் பணியகம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் ஐயா க. இராசமாணிக்கனார், பூதலூர் ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தரராசு, ஆசீவகம் சமய நடுவம் நிறுவனர் முனைவர் ஆசீவக சுடரொளி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் ஐயா சிவ. வடிவேலன் (சென்னை), முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (சிதம்பரம்), கா. பொன்னுசாமி (வத்தலகுண்டு), புதுக்கோட்டை மாவட்டம் – நெய்வேலி சன்மார்க்கச் சங்க மையம் திரு. இரா. முத்தையா, பேராசிரியர் சௌ. காமராசு (மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலை காப்பு இயக்கம்), முத்தம்மாள் (வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம்), திருப்பத்தூர் ஆன்மிகச் செயல்பாட்டாளர் திரு. ஓம்பிரகாசு, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் செம்மலர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். தோழர் க. அருணபாரதி ஒருங்கிணைத்தார். ஆர்ப்பாட்டத்தில், ஆண்கள் – பெண்கள் எனத் திரளான ஆன்மிகர்களும், செயல்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தெய்வத் தமிழ்ப் பேரவை.

Leave a Reply