Home>>அரசியல்>>ஆதிச்சபுரத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மருத்துவம்மாவட்டங்கள்

ஆதிச்சபுரத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரத்தில் புதிதாக 1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி 27:08:2022 அன்று வைத்தார்கள்.

அதன்தொடர்ச்சியாக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் அவர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி, தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், துணை தலைவர் விமலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளாஇளரா, சிபிஐ கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆதிச்சபுரம் மு.அமுதா, நெம்மேலி நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


செய்தி உதவி:
திருத்துறைபூண்டி மக்கள் எம்எல்ஏ செய்திகள்.

Leave a Reply