Home>>இந்தியா>>தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் எண்ணிக்கையினைக் கூட குறைப்பதா?
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் எண்ணிக்கையினைக் கூட குறைப்பதா?

ஆசிரியர் தினவிழாவில் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து சொல்கிறார். ஆண்டொன்றுக்கு 375 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கி வந்த ஒன்றிய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா ஒன்றியம் முழுவதும் 46 பேருக்கு தான் விருது வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு, சுமார் இருபத்தைந்து ஆசிரியருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது (கடந்த ஆண்டு இருவர்). விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கூட மத்திய அரசு குறைத்து வரும் நிலைமை. வாழ்த்துவதற்கு மனம் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு செய்வதற்கு மனமில்லையா??


திரு. இராஜப்பா,
தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்,
மன்னார்குடி.
05/09/2022.

Leave a Reply