Home>>அரசியல்>>மதுரையில் தொடர்வண்டி பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

மதுரையில் தொடர்வண்டி பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் – பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்!


மதுரை தொடர்வண்டி நிலையத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணித்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்ததும், 20க்கும் மேற்பட்டோர் காயமுற்ற சம்பவம் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

சுற்றுலா பயணிகள் பயணம் செய்த (தனியார் பார்ட்டி கோச்) ரயில் பெட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி உணவு சமைத்ததன் விளைவாகவே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகியுள்ளது.

எனவே, இதுபோன்ற விபத்துக்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ரயில்வே துறையின் நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்திட வேண்டுமெனவும், படுகாயமுற்று சிகிச்சை பெறுவோர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply