— ஆனந்த், முத்துப்பேட்டை
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இயக்குநர் சரவணன் இயக்கத்தில் சசிகுமார் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் முக்கிய காட்சி தஞ்சை அரசு மருத்துவமனையில் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்புக்காக வந்த ஜோதிகா அங்கு பெண்கள் பிரசவ வார்டில் எந்த ஒரு வசதியில்லாமல் சிரமப்படுவதை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
அதன்பிறகு தஞ்சையில் கோவிலுக்கு அளிக்கப்படும் வசதிகள் கூட மருத்துவமனைக்கு இல்லை என்ற ரீதியில் தனது வேதனையை பதிவிட்டார்.
அதனால் கடும் விமர்சனத்தை அந்த நேரத்தில் சந்தித்தார்.
இந்நிலையில் தனக்கு அதிர்ச்சியை தந்த நிகழ்வுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு ரூ.25 லட்சத்தை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அவர்கள் நன்கொடையாக இன்று வழங்கினார்.
நன்கொடையை சுகாதரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டு நடிகை ஜோதிகாவை வெகுவாக பாராட்டினார்.



