Home>>வணிகம்>>அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக லாபம் கொடுக்கும் பங்குகள்
வணிகம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக லாபம் கொடுக்கும் பங்குகள்

பங்கு சந்தை வர்த்தகம் என்பது ஒரு சூதாட்டம் என பலர் சொல்லி கேட்டிருப்போம். உண்மையில் இது ஒரு ஆழ்கடல். எனவே இந்த ஆழ்கடலை பற்றி உண்மையாக இதனை பற்றி அறிந்தவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும்.

இல்லையெனில் நட்டம் எனும் தண்ணீரில் மூழ்க வேண்டியிருக்கும். ஆகையால் எடுத்தவுடன் கேட்பார் பேச்சை கேட்டுக் கொண்டு பங்கு சந்தையில் முதலீடு என்பது ஆழம் தெரியாமல் காலை விடுவதாகவும்.

எனவே முதலில் பங்கு சந்தையை பற்றி முழுமையாக அறிந்த பின்னர், அதில் முதலீடு செய்யலாம். இல்லையெனில் சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்து லாபம் பெறலாம்.

அதிலும் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில், சந்தையில் பலமான ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகின்றன. உண்மையில் சொல்லப்போனால் பல மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பங்கு சந்தை முதலீடு என்பது மிக சிக்கலான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்படி இருக்கையில் நிபுணர்கள் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர்.

குறிப்பாக டாடா குழுமத்தினை சேர்ந்த TATA Power, TATA Chemicals, TATA Consumers என மூன்றும் பங்குகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு நல்லதொரு லாபத்தினை கொடுக்கலாம் என்கிறார்கள் IIFL securities நிபுணர்கள்.

மேலும் இந்த TATA Consumers பங்குகள் தங்க சுரங்கம் என்றும் மிகைப்படுத்தி கூறியுள்ளனர்.


மனோஜ்குமார்,
மன்னார்குடி

Leave a Reply