Home>>அரசியல்>>மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (12-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பெரியார் சிலை எதிரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைத்தார்கள்…

1) கொரோனா வைரஸ் கோர பிடியில் இருக்கும் போது வணிக பெரு மக்கள், சுய உதவி குழுக்கள், மற்றும் பொது மக்கள் வாங்கிய கடனை கந்து வட்டிக்காரன் போல வசூல் செய்யும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை கண்டித்தும் மத்திய, மாநில அரசுகள் அதனை உடனடியாக தடுக்க கோரியும்.

2) தனியார் பள்ளிகளில் முழுமையான கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்ககோரியும்.

3) பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்தும் குரல் எழுப்பினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பி. காளியம்மாள், திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் இராம. அரவிந்தன், தொகுதி தலைவர் தி. ப. சரவணன், தொகுதி செயலாளர் வேதா. பாலா, தொகுதி துணை தலைவர் நா. அருளழகன், தொகுதி இணை செயலாளர் பரவாக்கோட்டை இரா. செந்தில் குமார், பொருளாளர் கட்டக்குடி ஆ. ஜோசப் தினேஷ், மன்னை நகர செயலாளர் (நடுவண்) மன்னை ஜாபர் அலி, மன்னை நகர செயலாளர் (கிழக்கு) வாஞ்சியூர் குணதாசன், தொகுதி செய்தி தொடர்பாளர் சு. பாலமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.


செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி

Leave a Reply