Home>>செய்திகள்>>திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு
திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு
செய்திகள்தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு

சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை ஏற்று திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு, திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

திருத்துறைப்பூண்டில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திருத்துறைப்பூண்டியில் உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய சார்பு நீதிமன்றம் நடப்பு ஆண்டிலேயே அமைத்திட வேண்டும் என கடந்த 31/08/2021 சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து பேசினார்.

இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை ஏற்று 07/09/2021 சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டத்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார்.

திருத்துறைப்பூண்டியில் உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய சார்பு நீதிமன்ற அமைக்கபடும் என சட்டப்பேரவையில் அறிவிக்கபட்ட செய்தி அறிந்த வழக்கறிஞர் சங்கத்தினர் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தனர்.

மேலும் இன்று 08/09/2021 திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்.பி.அருட்செல்வன் தலைமையில் துணைத்தலைவர் பழனிதுரை, செயலாளர் என்எஸ் செந்தில்குமார், துணைச்செயலாளர் வி.வி.செந்தில்குமார், பொருளாளர் வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான வழக்கறிஞர்களும் பங்கேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து சங்க தலைவர் ஆர்.பி.அருட்செல்வன் பேசும் போது திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று சார்பு நீதிமன்ற அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கும், சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பெற்றுதந்த திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க. மாரிமுத்து அவர்களுக்கும் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


செய்தி உதவி:
தோழமையுடன்
கா.லெனின்பாபு
08/09/2021

Leave a Reply