Home>>சுற்றுசூழல்>>சாக்கடை மண்ணை அகற்றாமல் இருக்கும் மன்னார்குடி நகராட்சி
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

சாக்கடை மண்ணை அகற்றாமல் இருக்கும் மன்னார்குடி நகராட்சி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரத்தில் உள்ள 31வது Ward, ஏழாம் தெரு Cement சாலையில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள சாக்கடையை தூய்மைப்படுத்த அதில் இருந்த மண்ணை அதன் அருகிலேயே கொட்டிவிட்டு சென்றார்கள். அந்த சாக்கடை மண்ணை இன்று வரை அகற்றவில்லை.

இந்த மண் மீண்டும் மீண்டும் கரைந்து சாக்கடையிலேயே செல்கிறது. மேலும் மழையால் அந்த Cement சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மற்றும் பாதையே இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.

ஒரு பணியை செய்தால் அதை முழுமையாக நிறைவுபெற செய்யாமல் இப்படி விட்டுச்செல்வது நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

சாக்கடை மண் சாலையில் உள்ளதை நீங்கள் அறிந்துக்கொள்ள, அதன் ஒளிப்படங்கள் தங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளோம்.


செய்தி உதவி:
திரு. கார்த்திகேயன்,
தேமுதிக – நகர கழக செயலாளர்,
மன்னார்குடி.

Leave a Reply