Home>>இந்தியா>>இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகள் கெலிகாப்டர் விபத்தில் பலி
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகள் கெலிகாப்டர் விபத்தில் பலி

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத், அவரது மனைவி திருமதி. மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப் பகுதியில் கெலிகாப்டர் விபத்தில் பலியான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்தியாவின் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உயர் பொறுப்பிற்கு வந்த முப்படை தளபதி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கெலிகாப்டர் விபத்தில் பலியானது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இந்திய ராணுவம் இத்தகைய இழப்புகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை. மிகுந்த துயரத்தையும், வேதனையையும் தருகிற இந்த செய்தி நாட்டு மக்களையே உலுக்கியுள்ளது.

குன்னூர் கெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தளபதி திரு. பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு தமிழ்நாடு காங்கிரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


திரு. கே.எஸ். அழகிரி,
தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர்.

Leave a Reply