Home>>செய்திகள்>>கொளத்தூரில் வீடுகளை முறையான அறிவிப்பின்றியும் இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்.
செய்திகள்தமிழ்நாடு

கொளத்தூரில் வீடுகளை முறையான அறிவிப்பின்றியும் இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்.

சென்னை கொளத்தூரில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் வீடுகளை தேவையான நிலம் பற்றி முறையான அறிவிப்பின்றியும் மாற்று இடம் ஏதும் ஒதுக்காமலும் இடிப்பதைக் கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் கடந்த 14.12.21 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் 3வது நாளாக இன்றும் கொளத்தூர், அவ்வை நகர், குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவர்களின் கோரிக்கைகள்:

தமிழக அரசே! முதல்வரே!

அவ்வை நகர் பகுதி மக்களிடம் பேசி திட்டத்தை தொடருங்கள்.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் வாழ்ந்து வரும் வீடுகளை இடிப்பதை உடனே நிறுத்துங்கள்!

ஏற்கனவே அளவீடு செய்த இடம் வரை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பகுதிக்கு உடனடியாக பட்டா வழங்குங்கள்.


செய்தி உதவி:
J. செபாஸ்டின்,


செய்தி சேகரிப்பு:
ஜெயராஜ பிரகாஷ்,
பேரளம்.

Leave a Reply