Home>>செய்திகள்>>பொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

பொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.

கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத வேட்டி சேலைகள். மன்னார்குடி நகரம் முழுவதும் சுமார் 18500க்கு அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் வேட்டி சேலைகள் நகரம் முழுவதும் தினக்கூலி தொழிலாளர், கட்டிட தொழிலாளி, அமைப்புசாரா ஓட்டுனர் உட்பட ஏராளமான அடித்தட்டு ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் PHH AYY கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். கடந்த ஆண்டு வேட்டி சேலை பெற்ற NPHH காரடுகளுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. வாழ்வாதாரத்தின் அடிப்படையில் முறையான கணக்கெடுப்பின் படி NPHH கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

உதாரணமாக எங்கள் பகுதியான 33வது வார்டு, மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள முதல் சேத்தி அங்காடியில் கடந்த ஆண்டு பொங்கல் வேட்டி சேலை பெற்ற நூற்றுகணக்கான ஏழை எளிய அடித்தட்டு தினக்கூலி கட்டிட தொழிலாளர் குடும்பங்களுக்கு கிடைக்காதது வேதனை அளிக்கிறது.

எங்கள் பகுதியில் 80சதவீத தினக்கூலி ஏழை தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. மன்னார்குடி நகரத்திற்கு 11000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத நிலையில், 11000கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் இருக்கிறதா..???

அப்படி இருந்தால் அவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட வேட்டி சேலை உட்பட அரசின் திட்டங்கள் கிடைத்து அவர்கள் பயனடையவும். இல்லையெனில் இதில் உள்ள குளறுபடிகளையும் முறைகேடுகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும்.

மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கள் அதிகாரி அவர்களை ஏழை எளிய மக்களுக்கு, கிடைக்க வேண்டிய பொங்கல் வேட்டி சேலைகள் கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைத்திட, அவர்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.


செய்தி உதவி:
திரு. அமிர்தராஜா,
மன்னார்குடி.

Leave a Reply