Home>>அரசியல்>>நாடாளுமன்ற உறுப்பினர்களை வெறும் பார்வையாளர்கள் ஆக்க முயற்சிப்பதா?
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர்களை வெறும் பார்வையாளர்கள் ஆக்க முயற்சிப்பதா?

கோயம்புத்தூர், ஜூலை 25:


நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கள் அவையில் பேசக்கூடாது என்பதற்காகவே வார்த்தை களுக்கு தடை விதித்திருக்கிறது மோடி அரசு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டும் என பாசக நினைக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. பேரவை கூட்டத்தை துவக்கிவைத்து கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:

மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணாத பணவீக்கத்தை, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டினால் உலக நாடுகள் இப்படித்தான் நெருக்கடியை சந்தித்து வருவதாக தனது தோல்வியை மறைக்க அடுத்த நாட்டை அடையாளம் காட்டுகிறார்கள்.

பணவீக்கம் உண்மையில் 8 சதவிகிதம் என்று சொன்னாலும், உண்மையில் சில்லரை வணிகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது. இதுபோன்ற ஒரு நிலை தான் இலங்கையில் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததன் காரண மாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோலியப் பொருட்கள், எரி பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு நெருக்கடியை இந்திய நாடும் சந்தித்து வருகிறது. டாலர் கை யிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம் வேலையின்மை 9 சத விகிதமாக அதிகரித்துள்ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு பதி லாக மக்கள் நலத்திட்டங்களுக்கான மாநியங்களை வெட்டிச்சுருக்குகிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை குறைக்கிறது. இலவசம் தேவையில்லை என பிரதமர் மோடி பேசுகிறார். மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், நிவாரணங்களைக் கூட ஒன்றிய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்துகிறது. நாட்டை காப்பாற்ற முடியுமா என்கிற ஐயம் எழுந்துள்ளது.

நாட்டை பின்னோக்கி இழுக்கிற வேலையை பாஜக அரசு செய்கிறது. ஆனால் அம்பானி, அதானி சொத் துக்களின் மதிப்புகள் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடி குறித்து பேச அனுமதிப்பதில்லை. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி ஆட்சியில் வெறும் பார்வையாளர்களா கவே இருக்க முடியும்.

நெருக்கடியில் உழல்கிற மக்களின் மனங்கள் எரிமலையாய் கொதிப்பதை அறிய முடி கிறது. இதனை திசைதிருப்பத்தான் பிரித்தாளும் சூழ்ச்சி யை திட்டமிட்டு பாசக செயலாக்க முனைகிறது. நாட்டில் எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பதுதான் தனக்கு ஆதாயம் என்று பாசக நினைக்கிறது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழியும் இயக்கங்களை வெற்றி கரமாக்கிடவும், அதில் வெகு மக்கள் திரளாக பங்கேற்க வைப்பதிலும் கட்சியின் ஊழியர்கள் முனைப்போடு செயல் பட வேண்டும்.

Leave a Reply