Home>>அரசியல்>>திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சி
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வரலாறு

திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் பங்கேற்றார்கள்.

பொதுவுடைமை தலைவர் இலக்கிய பேராசான் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்துறைபூண்டி காமராசர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஜீவாவின் திருஉருவ படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

இந்த நிகழ்வில் தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோபழனிச்சாமி அவர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.உலகநாதன் எக்ஸ் எம்எல்ஏ, க.மாரிமுத்து எம்எல்ஏ, அ.பாஸ்கர் ஒன்றியக்குழு தலைவர், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வழக்கறிஞர் வையாபுரி, ஒன்றிய செயலாளர் ஜி.ஜவகர், நகரச் செயலாளர் டி பி சுந்தர், மாவட்டகுழு உறுப்பினர் முத்துக்குமரன், மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவர் ஜேபி வீரபாண்டியன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள், சிபிஐ நிர்வாக குழு தோழர்ரகள், அரசு ஊழியர் சங்கம் சி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செய்தனர்.


செய்தி உதவி:
தோழர். லெனின்பாபு காத்தவராயன்,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply