Home>>அரசியல்>>உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது.

தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு Swiggy நிறுவனம் செவிசாய்க்கவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். இப்பிரச்னையைத் தீர்த்து வைக்க தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படித்த இளைஞர்கள் பலர் தங்கள் படிப்புக்குரிய வேலை கிடைக்காததால் பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த உணவு விநியோக பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது.


திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply