Home>>அரசியல்>>கர்நாடகாவில் ஓலா, ஊபர் தானிகளுக்கு மீண்டும் அனுமதி
அரசியல்

கர்நாடகாவில் ஓலா, ஊபர் தானிகளுக்கு மீண்டும் அனுமதி

ஓலா, ஊபர் தானிகளுக்கு(ஆட்டோ)மீண்டும் அனுமதி;
கர்நாடக அரசு அதிரடி உத்தரவு.

கர்நாடக அரசிடம் உரிய அனுமதி பெற்று ஓலா, ஊபர் நிறுவனங்கள் தானிக்களை இயக்கலாம் என்றும், கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கவும் கர்நாடக போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் வாடகை மகிழுந்துக்கள்(கார்) மற்றும் தானிக்கள் சேவையை வழங்கி வருகின்றன. இதில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இந்த நிறுவனங்களின் மகிழுந்துகள் மற்றும் தானிக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் அந்த நிறுனங்கள் வாடகை மகிழுந்துகளை மட்டுமே இயக்க அனுமதி பெற்றுள்ளதாகவும்,தானிகளின் சேவையை வழங்க அனுமதி பெறவில்லை என்றும் புகார் எழுந்தது. மேலும் தானி பயண கட்டணமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.100 வரை கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து கர்நாடக அரசின் போக்குவரத்து துறை கடந்த 7-ந் தேதி, ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் தானிகளை இயக்கத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.அந்த நிறுவனங்கள் உரிய விளக்கத்தை அளிக்காததால், பெங்களூருவில் நேற்று முன்தினம் அந்த நிறுவனங்களின் தானிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நிறுவனங்களின் தானிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.இதை கண்டித்து அந்த தானிகளின் உரிமையாளர்கள் பெங்களூரு சாலை போக்குவரத்து அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறிமுதல் செய்த தானிகளை விடுவிக்க வலியுறுத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் பறிமுதல் செய்த தானிகளை விடுவித்தனர்.இந்த நிலையில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களின் தானிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கா்நாடக அரசின் போக்குவரத்துத்துறை ஆணையர் திரு.குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தானி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் தானி களை அனுமதி பெற்று இயக்க வேண்டும் என்றும், கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 நிர்ணயிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். பயண கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ஜி.எஸ்.டி. உள்பட ரூ.30 மட்டுமே வசூலிக்க வேண்டும். அதைவிட அதிகமாக கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.அதை அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. தானிகளை இயக்க அந்த நிறுவனங்கள் விண்ணப்பித்தால் அதற்கு அனுமதி அளிப்பது குறித்து போக்குவரத்து மந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு குமார் கூறினார்

Leave a Reply