Skip to content
Monday, August 3
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
Home>>அரசியல்>>பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரிக்கை – த. வா. க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரிக்கை – த. வா. க

Senthil KumaranAugust 6, 2021 435 Views0

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் படி, பேரறிவாளன் உள்ளிட்ட ஈழ தமிழர்களை விடுதலை செய்வதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின் படி, மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில், அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அத்தீர்மானத்தை மதிக்காத ஆளுநர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினார். பின்னர், திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, காலம் கடந்து குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தார் ஆளுநர்.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 7 தமிழர் வழக்கிற்கும் பொருந்தும்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

செய்தி சேகரிப்பு:
இரா. செந்தில்குமரன்,
மன்னார்குடி

Share:

Previous Post

தமிழ் அர்ச்சனையைக் கட்டாயமாக்க வேண்டும்!

Next Post

திருவள்ளுவரின் எழுத்துநடை

Related Articles

காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

முழு மதுவிலக்கே பா.ம.க.வின் இலக்கு… தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை!

செந்தமிழன் சீமான் அரசியல்ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு கிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!

இந்தியாஇலக்கியம்கட்டுரைகள்கதைகவிதைசெய்திகள்

2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காதமி விருதுபெறும் எழுத்தாளர் அம்பை

அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும்!

செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

நிரம்பிய மேட்டூர் அணை: வீணாகும் நீரை ஏரிகளில் உடனடியாக நிரப்ப வேண்டும்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

வேளாண்மை

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு