Home>>அரசியல்>>கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ 5.22 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ 5.22 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ 5.22 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்: அடிக்கல் நாட்டு விழாவில் க.மாரிமுத்து முன்னிலையில் நாகை எம்.பி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே.கலைவாணன் பங்கேற்றார்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலமானது தியாகி எஸ்ஜி முருகையன் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க பணி காலத்தில் கட்டபட்டது. கட்டிடம் மிகவும் பழமையாக உள்ளதால் புதிய கட்டிடம் வேண்டி சட்டப்பேரவையில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க. மாரிமுத்து அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோரை சந்தித்து வலியுருத்தினார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு ரூ 5.12 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் கோட்டூரில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே.கலைவாணன், ஒன்றியக்குழு தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

இந்த நிகழ்வில் சிபிஐ ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில்நாதன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் திரு பால ஞானவேல், விஎஸ்ஆர் தேவதாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திருமதி மஞ்சுளா இலரா, திருமதி கலைவாணி மோகன், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கேஜி ஆனந்தன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


செய்தி உதவி,
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.
17/02/2023

Leave a Reply