Skip to content
Thursday, April 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>அரசியல்>>பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரிக்கை – த. வா. க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரிக்கை – த. வா. க

Senthil KumaranAugust 6, 2021 377 Views0

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் படி, பேரறிவாளன் உள்ளிட்ட ஈழ தமிழர்களை விடுதலை செய்வதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின் படி, மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில், அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அத்தீர்மானத்தை மதிக்காத ஆளுநர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினார். பின்னர், திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, காலம் கடந்து குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தார் ஆளுநர்.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 7 தமிழர் வழக்கிற்கும் பொருந்தும்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

செய்தி சேகரிப்பு:
இரா. செந்தில்குமரன்,
மன்னார்குடி

Share:

Previous Post

தமிழ் அர்ச்சனையைக் கட்டாயமாக்க வேண்டும்!

Next Post

திருவள்ளுவரின் எழுத்துநடை

Related Articles

திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம் கல்விசெய்திகள்தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம்

இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?

அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்வரலாறு

மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி – மருத்துவர் அன்புமணி இராமதாசு!

இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

நீட் தேர்வில் 9,19,400ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்.

அரசியல்செய்திகள்தமிழ்நாடு

அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு