Skip to content
Monday, August 24
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
Home>>அரசியல்>>பஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

பஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?

adminSeptember 21, 2021 638 Views0

ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஐயா அவர்களுக்கு வணக்கம்!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பட்டியல் பிரிவில் உள்ள ராமதாசிய சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி என்பவரை புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு இதுதொடர்பாக நாடு முழுவதிலிருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தாங்களும் இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் யாரும் சுட்டிக்காட்டாத வகையில் துப்புரவு
தொழில் செய்து கொண்டு இருந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்கி உள்ளது போல் கூறி உள்ளது அவரையும் அச்சமூகத்தை இழிவுபடுத்துவது போலவும் உள்ளது. இது என்னை போன்ற பலருக்கு மன உலைச்சல் தருகிறது. தங்கள் மீதான மதிப்பு குறைதல் ஏற்படுமோ என வருந்துகிறோம்.

தற்போது முதல்வராக பொறுபேற்க உள்ள சரண்ஜித் சிங் சன்னியை துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன? அவர் எப்போது துப்புறவு தொழில் செய்தார் என்று சொல்ல முடியுமா? சரண்ஜித் சிங்கின் தந்தை ஹர்சா சிங் ஊராட்சித் மன்ற தலைவராகவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர் என்பது தெரியுமா உங்களுக்கு?

குப்பை கூட்டி கொண்டு இருந்தவரை முதலமைச்சர் ஆக்கவில்லை அவரது அப்பா உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் என மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்கு பட்டு பொதுவாழ்வில் இருந்தவர், அவர் வழியில் அவரது மகனான தற்போதய முதல்வர் சரண்ஜித் சிங் பள்ளியிலே மாணவ தலைவராகவும் இருந்தவர், சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் அவர் இளங்கலையும் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜலந்தரில் எம்பிஏ படிப்பு முடித்தவர்.

இதுமட்டுமல்லாமல் சரண்ஜித் சிங் கவுன்சிலர் பதவியில் மூன்று முறை இருந்திருக்கிறார். அவர் காரர் முனிசிபல் கவுன்சில் தலைவராகவும் இருந்திருக்கிறார். 2007 ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிஸ் கட்சி வாய்ப்பு வழங்காத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார், அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் 2012 ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். 2015_2016 சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக சட்டபேரவை உறுப்பினர் ஆனதோடு தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார், அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இத்தகைய பின்னனி கொண்ட ஒருவரை துப்புரவு பணி செய்து கொண்டு இருந்தவர் என்று சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் என்ன? பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என சொல்ல விருப்பம் இல்லை என்றால் வழக்கம்போல ஒடுக்கபட்ட, பிதுக்கபட்ட நசுக்கபட்ட, கசக்கபட்ட, நொருக்கபட்ட சமூகத்தை சேர்தவர் என்றோ, தலித் என்றோ குறிப்பிட வேண்டியது தானே? இந்த அறிக்கையில் உயர் சாதி, தாழ்ந்த சாதி பதங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் இதைபற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் துப்புரவு தொழிலை செய்து கொண்டு இருந்தவர் என்று சொல்ல காரணம் என்ன? அவர் எப்போது துப்புறவு பணி செய்தார் என்று சொல்லுங்கள் இல்லையே உங்கள் கருத்திற்கு வருத்தம் தெரிவித்து திரும்ப பெறுங்கள். ராமதாசிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அப்படி சொல்கிறீர்களா அப்படிச் சொன்னால் அது ஏற்புடையதாக என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

பல்வேறு அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஆக்கி இருந்தாலும் கூட இந்த நிகழ்வு வரவேற்க தக்கது. அதே நேரத்தில் மூன்றுமுறை சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவை துப்புரவு தொழிலாளர் என்கிற ரீதியல் உங்களின் இது போன்ற கருணைமிக்க வர்த்தைகள், பச்சாதாபங்கள் அச்சமூகத்தினரை சொல்லாமல் கொள்கிறது . மேலும் தமிழகத்தில் துப்புறவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்க அரசாணையே வெளிட்டுள்ள நிலையில் தாங்கள் இன்னும் மேட்டிமையோடு வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.

நன்றி.

தோழமையுடன்
கா.லெனின்பாபு
20/09/2021

Share:

Previous Post

மன்னார்குடி வ.உ.சி. சாலை விபத்தில் பலியான பெண்மணி

Next Post

எட அன்னவாசலில் மியாவாக்கி குறுங்காடு

Related Articles

இந்தியாவிளையாட்டு

2021 T20 உலகக்கோப்பை: “யானைப் பசிக்கு சோளப் பொறி”

அரசியல்ஈழம்உலகம்செய்திகள்

யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு – நாற்பதாவது நினைவு நாள்!

தோழர் தமிழரசன் அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

இன்று செப்டம்பர் 1 – தோழர் தமிழரசன் மற்றும் தோழர்களுக்கு வீரவணக்கம்!

இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

சல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா?

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

நெல் உற்பத்தியில் 18% மட்டுமே சேமிக்க முடியும்: கிடங்குகளை அதிகரிக்க வேண்டும்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆவணி மின்னிதழ்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

வேளாண்மை

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆவணி மின்னிதழ்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு