திருவாருர் மருத்துவ கல்லூரியில் சுகாதார துறை அமைச்சர் விசயபாஸ்கர் அவர்களுடன் உணவு துறை அமைச்சர் காமராஜ் அவர்களும் இன்று (08/08/2020) ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக கொரனா மருத்துவ பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணி நேரங்கள் பற்றிய குறைகளை கேட்டறிந்தனர்.
அத்துடன் கொரனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது தொடர்பான விளக்கத்தையும் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்வில் திருவாருர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்.




