Home>>இதர>>எடையூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த குடியிருப்பு வீடுகள்.
இதர

எடையூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த குடியிருப்பு வீடுகள்.

எடையூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த குடியிருப்பு வீடுகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட எடையூர் ஊராட்சி குமரபுரம் கர்ணகொடை கிராமத்தில் அரசால் கட்டி கொடுக்கபட்ட குடியிருப்பு வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதை அறிந்து இன்று (21/11/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

வீடுகளில் பாதுகாப்போடு வசிக்க வேண்டும் என கேட்டு கொண்டதோடு இந்த வீடிகளை அகற்றி புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விடுபட்ட அனைவரும் கொரானா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply