Home>>உடல்நலம்>>சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு
உடல்நலம்மருத்துவம்

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு

சக்கரை வேண்டும் அக்கறை!!

கடந்த நூற்றாண்டு முதல் உலகின் பெரும் சாபக்கேடுகளில் ஒன்று நீரிழிவு நோய். உலகம் முழுதும் பெரும்பான்மையார் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். முன்பு எல்லாம் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே நீரிழிவு பாதிப்பு இருந்த நிலையில் இன்று 35 வயதிலேயே பலருக்கு வந்த வண்ணம் உள்ளது.

ஒருகாலத்தில் ஊருக்கு ஒரு சர்க்கரை நோயாளி இருந்தால் பெரிது. இன்று தெருவுக்கு பத்துப் பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அந்த அளவுக்கு அது பொதுநோயாக மாறியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மரபணுக்கள் என்றாலும் நம் வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறையே முக்கிய காரணமாக உள்ளது.

நீரிழிவு நோய் உண்டாக காரணம்.

நம் உடலில் கணையத்தில் ஆல்பா, பீட்டா என்ற இரண்டு செல்கள் உள்ளன. இதில் ஆல்பா
செல்லில் வேலை நம் உடலில் போதுமான அளவு உணவு இல்லமால் ஆற்றல் வெகுவாக குறையும் போது போது உடனடியாக குளுக்கோஸ் சுரக்க செய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

உடலில் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுப்பொருட்கள் குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கும் பொழுது அது உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்ற பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கும்.

இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படும். அது உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றப்படும். ஆனால் ஒரு காலகட்டத்தில் அந்த பீட்டா செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்துவிடும். இதனால் இன்சுலின் சுரப்பது குறையும். அந்த வேளையில் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகள் குளுக்கோஸாக மாறி அதை எதிர்ப்பதற்கு போதுமான இன்சுலின் இல்லாமல் சர்க்கரையாக ரத்தத்தில் தேங்கிவிடும். இதுதான் சக்கரை வியாதி என்கின்ற நீரழிவு நோய்.

நீரிழிவு நோய் வகைகள்.

1. type 1.
பிறப்பில் இருந்தே இன்சுலின் குறைபாடு இருப்பது. அதாவது கணையத்தில் பீட்டா செல்கள் குறைபாடு இருப்பது.

2. type 2
நன்றாக இயங்கி கொண்டு இருக்கும் பீட்டா செல்கள் காலப்போக்கில் அதாவது 35 வயதிற்கு மேல் அல்லது 40 வயதிற்கு மேல் மேல் மரபணு காரணமாகவும் உணவு முறை காரணமாகவும் காரணமாகவும் சிறிது சிறிதாக செயலிழக்க ஆரம்பித்து விடும்.

உலக அளவில் டைப் 1, டைப் 2 ஆகிய இந்த இரண்டுவகையான சர்க்கரை நோய்களும், ஏறத்தாழ 42 கோடி பேருக்கும்மேல் இருக்கிறது என்றாலும், தங்களுக்கு சர்க்கரைநோய் இருப்பது தெரியாமல் வாழ்வோரின் எண்ணிக்கை 20 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது புள்ளிவிவரம்.

3. கர்ப்பக்கால நீரிழிவு நோய்

கர்ப்பக் காலத்தில் அதிகம் சுரக்கும் ஹார்மோன்களான புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென், நஞ்சுக்கொடி ஹார்மோன் என அழைக்கப்படும் `ஹியூமன் பிளேசென்டால் லாக்டோஜென்’ (Human Placental Lactogen) ஆகியவை அனைத்தும் இன்சுலினுக்கு எதிராக வேலைசெய்யும் தன்மை உடையவை என்பதால், அதை ஈடுகட்ட இயல்பாகவே கர்ப்பிணிகளின் உடலில் இன்சுலின் சற்று அதிகமாக உற்பத்தியாகத் தொடங்கும். ஆனால் கர்ப்பிணிகளில் ஒருசிலருக்கு, அதிலும் குறிப்பாக அதிக உடல்பருமன், குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ளவர்கள், பிசிஓடி (PCOD) பிரச்னை உள்ளவர்களுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காததால், அவர்களுக்கு இந்த கர்ப்பகாலத்தில் மட்டும் சர்க்கரைநோய் வருகிறது. இதையே `கர்ப்பகால சர்க்கரைநோய்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.

ஆரம்ப நிலை அறிகுறிகள்

உடலில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதீத தாகம், பசி இவை எல்லாம் ஆரம்ப நிலை அறிகுறிகள். இதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சிறுநீரகம் வெளியேற்ற அதிக வேலை பார்ப்பது தான். இதனால் தான் நம் உடலுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. ஆற்றலும் குறைகிறது. இதனால் பசியும் ஏற்படுகிறது. தொடர்ந்து சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகம் கடுமையாக வேலை செய்வதால் ஒரு கால கட்டத்துல சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரகப் பழுது பிரச்சனைகளும் ஏற்படுகிறது. ஆனால் பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லமாலும் இருக்கும். ரத்தப் பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எனவே குறிப்பிட்ட வயதிற்கு மேல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இல்லனா சர்க்கரை அளவு மிக அதிகமாக ஏறிய பின் தான் அறிகுறிகள் தென்படும். அப்போது குறைப்பது கடினம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் கட்டுக்குள் வைத்து இருக்காலம்.

அலோபதி சிகிச்சை.

இன்று உலகின் பெரும்பான்மையினர் சர்க்கரை வியாதிக்கு அலோபதி வைத்தியத்தை மட்டுமே நம்புகின்றனர். ஆனால் இந்த அலோபதி வைத்திய முறை நம் உடலில் உள்ள சக்கரை வியாதியை நிரந்தரமாக குணப்படுத்துவது இல்லை. மாறாக அதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க மட்டுமே உதவுகிறது. இந்த அலோபதி சிகிச்சை முறை எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம். உடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் செயலிழக்கப்பட்டு அதனால் இன்சுலின் குறைபாடு ஏற்படும் நிலையில் அலோபதி மருத்துவம் செயற்கையாக இன்சுலின் சுரப்பை தருகிறது. ஆரம்பத்தில் மாத்திரைகள் மூலம் தருகிறது.

ஆனால் இந்த மருந்துகள் பீட்டா செல்களை ஒருபோதும் புனரமைக்காது. அது பாட்டுக்கு ஒரு பக்கம் அழிந்து கொண்டே போகும்.அவை அழிய அழிய உடலின் இன்சுலின் தேவை அதிகமாகி கொண்டே இருக்கும். நமக்கும் மாத்திரையின் அளவு ஏறிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பீட்டா செல்கள் முழுமையாக அழிந்த நிலையில் மாத்திரைகள் மட்டும் இல்லாமல் நேரடியாக இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் ஊசிகள் பயன்படுத்தப்படும். பின் கொஞ்சம் கொஞ்சமாக சிறு நீரகம் உட்பட உடலின் உறுப்புகள் பாதிக்கப்படும். முடிவில் உயிர் பிரியும்.

இதை இன்னும் எளிமையாக விளக்க வேண்டுமென்றால். நம்மிடம் ஒரு வாகனம் உள்ளது அதை இயக்க பெட்ரோல் தேவைப்படுகிறது. நாமும் ஒரு லிட்டர் பெட்ரோல் போடுகிறோம் அதை வைத்து அந்த வண்டி இயங்குகிறது. சாதாரணமாக ஒரு லிட்டருக்கு 70 கிலோமீட்டர் போகும் அந்த வாகனம் திடீரென 50 கிலோமீட்டர் மட்டுமே போகிறது. இப்படியே குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் ஒரு லிட்டருக்கு வெறும் 10 கிலோமீட்டர் மட்டுமே போகிறது மட்டுமே போகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும். இப்படி குறைவாக மைலேஜ் கொடுக்க என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அது எவ்வளவு குறைவான தூரம் மைலேஜ் கொடுத்தாலும் பரவாயில்லை நான் பெட்ரோல் அளவை ஏற்றிக்கொண்டே இருப்பேன், என் பணத்தை செலவு செய்து கொண்டே இருப்பேன் என்றால் அது தீர்வாகாது. வண்டியில் உள்ள கார்பரேட்டர் பிரச்சினையாக இருக்கலாம், அதை கண்டறிந்து சரி செய்தால் மட்டுமே இந்த பிரச்சனை தீரும்.

இதேபோலத்தான் அலோபதி மருந்துகளும் செய்கின்றன. கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் இருப்பதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து ம இந்த நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்தாமல், வெறுமனே மைலேஜ்க்கேற்றபடி பெட்ரோலின் அளவை ஏற்றிக் கொண்டே போவது போல இன்சுலின் குறைய குறைய மாத்திரைகளையும் ஊசிகளையும் ஏற்றிக் கொண்டே செல்கிறது.

அதனால்தான் இந்த நீரிழிவு நோய் இறுதிவரை குணப்படுத்த முடியாத நோயாகவே உள்ளது.

இந்தப் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, இன்சுலின், மாத்திரைகள், தொடர் பரிசோதனைகள் என்று பொருளாதாரரீதியாக ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும் பெரிதாக கைவைக்கும் இந்த சர்க்கரைநோய், உலகின் 15 சதவிகிதம் பொருளாதாரத்தையும் உறிஞ்சியெடுக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது உலக நீரிழிவு மையம் (World Diabetes Association).

புற்றுநோய், மூளை நோய், இதய நோய் இவற்றிற்கெல்லாம் நிரந்தர தீர்வு காணும் அலோபதி மருத்துவம், இந்த சாதாரண கணைய பீட்டா செல்கள் இறப்பை மீட்டுருவாக்கம் செய்ய முடியாமல் இருப்பதன் காரணம் என்ன?? இதன் பின்னணியில் பெரும் வியாபார நோக்கம் உள்ளது. ஒரு சர்க்கரை நோயாளி சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் மருந்துகளுக்காக 2000ரூ செலவு செய்கிறார் எனில் வருடம் 24000 ரூ. உலகம் முழுதும் 50 கோடி பேர் குறைந்தது பாதிப்பில் உள்ளனர் எனில் வருடம் 12 லட்சம் கோடிக்கு மருந்துகள் விற்பனை ஆகின்றன.சராசரியாக ஒவ்வொரு சர்க்கரை நோயாளிகளும் 20 வருடங்கள் தொடர் சிகிச்சை பெற்றால் எத்தனை லட்சம் கோடிகள் என்று கணக்கு போட்டு பார்க்க முடியாத அளவிற்கு வருமானம் குவிகிறது.

இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் நிரந்தர தீர்வை அலோபதி மருத்துவம் ஏற்படுத்தாமல் போவதற்கு.

இந்த இடத்துல ஒரு சந்தேகம் வரலாம். இதய நோய், புற்று நோய், மூளை நோய்க்கு மட்டும் ஏன் தீர்வு கண்டுபிடித்தார்கள் என, ஏனெனில் அவை யாவும் உயிர்க்கொல்லி நோய்கள். வாழும் காலம் குறைவு. இறந்து விடுவோம் என்று தெரிந்த பின் யாரும் மாத்திரை மருந்துகளுக்கு செலவு செய்ய தயாராக இருப்பதில்லை. எனவே அவற்றை குணப்படுத்தினால் தான் செலவு செய்வார்கள். ஆனால் சர்க்கரை வியாதி உடனடி உயிர்க்கொல்லி நோய் அல்ல. அது சிறிது சிறிதாக தான்,
ஆளைக் கொல்லும். தொடர் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்மை மிக ஆரோக்கியமானவர் போல தற்காலிகமாகக் காட்டும். இந்த நம்பிக்கையில் தான் மக்கள் தன் குடும்ப பட்ஜெட்டில் இருந்து சர்க்கரைநோய்க்கு என்று தனியாக மாதம் சில ஆயிரங்கள் செலவு செய்ய தயாராக உள்ளனர். இந்த மக்களின் அடிப்படை உளவியலை வைத்துதான் பெரிய பெரிய கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் பணம் கொழிக்கிறார்கள்.

தீர்வு

உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது. மரபணுவில் இருந்தால் நம்மால் வருமுன் தடுப்பது கடினம். எனவே அவ்வாறு இன்சுலின் குறைபாடு ஏற்பட்டவுடன் நாம் செய்ய வேண்டியது, உடலில் குளுக்கோஸ் சேர விடாமல் தடுப்பது மற்றும் சேர்ந்த குளுக்கோஸை இன்சுலின் துணையின்றி கரைப்பது.

எப்படி எனில், பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் பல சத்துக்கள் உள்ளன, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சர்க்கரை, உப்பு என. இவற்றில் குறிப்பாக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகள் மட்டுமே உடலில் குளுக்கோஸாக மாறி இரத்தத்தின் சக்கரை அளவை ஏற்றுகிறது. எனவே இந்த வகை உணவுகளான அரிசி வகை உணவுகள், தானியங்கள், கிழங்குகள், இனிப்பு வகைகள், மைதா வகை உணவுகள், சுத்திகரிக்கபட்ட பெட்ரோலிய சமையல் எண்ணெய் போன்றவற்றை உணவில் வெகுவாகக் குறைத்துக் கொண்டு கொண்டு நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு புரதம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை தேங்குவதை குறைக்கலாம். இதைத்தான் பேலியோ போன்ற உணவு முறைகள் செய்கின்றன.

அடுத்து, உணவில் சக்கரை தேங்கும் பட்சத்தில் தினசரி உடற்பயிற்சி, நடைபயிற்சி மூலம் இன்சுலின் செய்யும் வேலையை நாம் செய்து அதை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இந்த இரண்டு வழிகளை பின்பற்றினாலே சர்க்கரை வியாதியை நான் வாழ்நாள் முழுக்க கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கமுடியும்.

ஆனாலும் இது நிரந்தரத் தீர்வல்ல. ஒரு காலகட்டத்தில் பீட்டா செல்கள் முழுமையாக இறந்தபின் நிச்சயம் ஒரு பாதிப்பை உண்டு பண்ணும்.

நிரந்தர தீர்வு

எனவே ஆரம்ப நிலையிலேயே செயலிழந்து கொண்டிருக்கும் பீட்டா செல்களை புனரமைப்பதன் மூலமே சக்கரை வியாதியிலிருந்து நிரந்தரமாக குணமடையலாம்.

அதற்கு சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றில் தீர்வு உள்ளன என்கிறார்கள். முயற்சித்துப் பார்க்கலாம். அல்லது பன்னீர் பூக்கள் என்று சொல்லப்படும் ஒரு வகையான மூலிகை பூவில் அந்த தன்மை உண்டு என்கிறார்கள். அதைப் பற்றி தெரிந்து கொண்டு முயற்சித்துப் பார்க்கலாம்.

எது எப்படியோ இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நம் உடலையும் நாம் பொருளாதாரத்தையும் காக்க முடியும்.

சர்க்கரை அதன் மீது தேவை அக்கறை.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply