Home>>இந்தியா>>முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டு 13 ராணுவ வீரர்கள் மரணம்!
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டு 13 ராணுவ வீரர்கள் மரணம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 14 பேர் பயணித்த கெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் எனும் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இந்த விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.

Leave a Reply